ஜெ. மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜரானார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா ஆஜரானார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் அண்மையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் நேரில் விளக்கம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள கலசமகாலில் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜரானார். அப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.