For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அபராதத்தை தீபக் கட்டுவதாக கூறுவதில் சதி உள்ளது.. தீபா

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டுவதாக தீபக் கூறியள்ளதிலும் சதி உள்ளது என்று எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் தலைவர் தீபா ஜெயகுமார் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தாமே செலுத்துவதாக தீபக் கூறியுள்ளதில் சதி இருக்கிறது என்று தீபா தெரிவித்தார்.

தி.நகரில் அவர் அளித்த பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கில ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து கொண்டிருப்பதாக தீபக கூறியதன் பெரிய சதியே உள்ளது. அபராதத்தை நான் செலுத்துவேனா என்று கேட்கிறீர்கள், அதற்கு என்னிடம் பதில் இல்லை.

Deepak's interview to pay the Jaya's fine amount is also a conspiracy: Deepa

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அதே தொகுதியில் தீபா பேரவை போட்டியிடும். அங்கு நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழக மக்களுக்கு சசிகலா என்ன செய்தார்?. அவர் தமது குடும்பத்துக்கு தேவையானதை மட்டுமே செய்து கொண்டார். தமிழக மக்களுக்காக எனது வாழ்க்கையே அர்ப்பணிக்க உள்ளேன். மக்களின் விருப்பப்படியே அரசியல் பயணத்தைத் தொடங்கி உள்ளேன் என்றார்.

English summary
There is a conspiracy behind Deepak's statement to pay the Jayalalitha's fine amount, says Deepa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X