For Daily Alerts
Just In
ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதிக்கு சம்மன்
சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த விழா குறித்து திமுக தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழின் கேள்வி-பதில் பகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து முதல்வருக்கும், அதிமுக அரசுக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட கருணாநிதி மற்றும் முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வம் மீது ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி மற்றும் செல்வம் ஆகியோர் வரும் அக்டோபர் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
Comments
English summary
DMK supremo Karunanidhi has been summoned by a Chennai court in connection with a defamtion case filed by CM Jayalalithaa.
Story first published: Monday, September 23, 2013, 16:16 [IST]