For Quick Alerts
For Daily Alerts
Just In
நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான்!- ரஜினிகாந்த்
சென்னை: நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.
Comments
English summary
Rajinikanth says that Tamil Nadu is facing a different election this time.