For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் மரணம்.. தமிழக அரசு தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நாகை: டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல உயிரிழப்புகளும் நடைபெற்றுள்ளன. பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Dengue fever: 52 were died in Tamilnadu, says Health care department secretary

இதற்காக தமிழக அரசு சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த இடங்கள் கண்டறியப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் இதுவரை 52 பேர் உயிரிழந்துவிட்டனர்.

டெங்கு பாதிக்கப்பட்ட 80 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மேலும் இந்த தகவல்கள் தமிழக அரசின் கணக்கின்படி தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
TN Health and Family Welfare department's Principal Secretary Radhakrishnan says that so far 52 were died in Dengue fever in TN. He also says that 80 people have got right treatment for Dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X