நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தூத்துக்குடி செல்ல உள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் இதுவரை மாநில அரசு இதில் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
அங்கு 144 தடை உத்தரவு ததிரும்ப பெறப்பட்டு இருக்கும் நிலையில் நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று இரவு அவர் மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின் அங்கிருந்து கோவில்பட்டி சென்று அங்கு தங்க இருக்கிறார். அதன்பின் நாளை காலை தூத்துக்குடி சென்று அங்கு மக்களை சந்திக்க உள்ளார்.