For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள்: மதுரையில் அமைச்சர்கள் மரியாதை

இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அமைச்சர்கள் இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

Google Oneindia Tamil News

மதுரை: தேவர் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Devar Jayanthi: TN Ministers tribute

முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாளையொட்டி மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொருளாளரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 109வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குருபூஜையின் தேவருக்கு முளைப்பாரி, பால்குடம், அபிஷேகம், லட்சார்ச்சனை என பூஜைகள் செய்து குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இறுதி நாளான இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

English summary
Tamil Nadu ministers paid tribute Pasumpon Muthuramalanga Dever at Goripalayam in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X