என் மனைவியைக் காணவில்லை.. மாஜி அதிமுக எம்எல்ஏ பொன்னுசாமி போலீசில் புகார்!
தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி தன்னுடைய மனைவியை 16ம் தேதி முதல் காணவில்லை என்று போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் : தாராபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி தன்னுடைய மனைவி சத்தியபாமாவை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 63 வயது பொன்னுசாமி. இவர் முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் நேற்று தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய மனைவி சத்யபாமாவைக் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத் தருமாறும் கேட்டக் கொண்டிருந்தார்.
45 வயதான சத்யபாமாவை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை என்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் பொன்னுசாமி மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார், குடும்ப பிரச்னை காரணமாக சத்தியபாமா எங்காவது சென்றுவிட்டாரா? அல்லது வேறு எதாவது பிரச்னை உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.