For Daily Alerts
Just In
ரயிலில் அடிபட்டு இறந்த 'இளைஞர் பாதுகாப்பு படை' ஊழியர்- போலீசார் விசாரணை
தர்மபுரி: தர்மபுரியில் ரயில்வே இளைஞர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகாமணி என்ற அவர் ஒசூரில் இருந்து சேலம் வரையிலான ரயிலில் பாதுகாப்புப் படை ஊழியராக கடந்த ஒருவாரமாக இருந்து வந்துள்ளார் .
நேற்று இரவு 8.30 மணிக்கு மொரப்பூரில் இருந்து ரயிலில் சேலம் வந்தவர் கருப்பூர் மேம்பாலம் அருகில் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
மேலும் சம்பவ இடமானது சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். மேற்படி சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர ஆணையர்அவர்கள் மற்றும் துணை ஆணையர் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
Comments
English summary
Dharmapuri railway patrol worker hit in train and died yesterday. Police filed case and investigating about this death.