மாணவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி.. தீனதயாளனின் ரூ.48 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீனதயாளனின் ரூ. 48 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
சென்னை: மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீனதயாளனின் ரூ.48 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடத்தி மாணவர்களை மோசடி செய்துள்ளார்.
வங்கிகளில் ரூ.136 கோடியை பெற்றுக் கொண்டும், மாணவர்களிடையே ரூ.16 கோடியை பெற்றுக் கொண்டும் தீனதயாளன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே தீனதயாளனின் ரூ.104 கோடி சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.48 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.