இனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை
புதிய கட்சி தொடங்கி நடத்தி வரும் தினகரன் அதன் திறப்பு விழாவில் யாரும் கலந்து கொள்ளாதது அவரை அப்செட் ஆக்கியுள்ளது.
Recommended Video
சென்னை: புதிய கட்சித் துவக்கி அதனை ' நடத்தி' வரும் தினகரன், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். தினகரன் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை முக்கியஸ்தர்கள் பலரும் புறக்கணித்தனர்.
இது, தினகரனை அப்-செட்டாக்கினாலும் அதனை வெளிப்படுத்திக்கொள்ளாமல், எப்போதும் போல தான் உற்சாகமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில், தற்போது நிர்வாகிகளுக்கு அவர் போட்டிருக்கும் கட்டளை, எதிர் தரப்பின் கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறது.
அதாவது, கட்சி விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களிள் தினகரன் கலந்துகொள்ளும் போது, அவரை வரவேற்று அழைக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும், ' இரண்டாம் புரட்சி தலைவரே ! ' என அச்சடிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சமீபத்தில் அடையாறு இல்லத்துக்கு வரவழைத்துப் பேசிய தினகரனின் உதவியாளர்கள், இரண்டாம் புரட்சித் தலைவர் என்று தான் இனி தலைவரை ( தினகரன்) அழைக்க வேண்டும். இது தலைவரின் உத்தரவு என கேட்டுக்கொண்டார்களாம். இதனையடுத்து, சென்னையில் அத்தகைய போஸ்டர்கள் முளைத்து வருகின்றன.