கூடவே இருந்தோமே.. பேரை மறந்துட்டீயே தலைவா.. ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்செட்டாக்கிய தினகரன்!
ஒருவருடமாக ஆதரவு தந்த 18 எம்எல்ஏக்களின் பெயர்களை செய்தியாளர் சந்திப்பில் தடுமாற்றத்துடன் தினகரன் கூறியது எம்.எல்.ஏக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
சென்னை: அதிமுகவுக்குப்ப போகாமல் ஒருவருடமாக தனக்கு ஆதரவு தந்த 18 எம்எல்ஏக்களின் பெயர்களை செய்தியாளர் சந்திப்பில் தடுமாற்றத்துடன் தினகரன் கூறியது எம்.எல்.ஏக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நிறைவடைந்த கையுடன் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ குறித்து விளக்கமளித்தார். அணியில் உள்ள வெற்றிவேல் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் இறங்கிவிடட்டார். உண்மையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தவும், பொதுச்செயலாளர் சசிகலா மீதான களங்கத்தை துடைக்கவும் இதனை அவர் செய்துவிட்டார்.
பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தன்னுடைய அனுமதியில்லாமல் இந்த செயலை வெற்றிவேல் செய்துவிட்டார். அவர் என் நீண்ட கால நண்பர், கட்சிக்கும் அப்பாற்ப்பட்ட உறவு எங்களுடையது. எந்த அரசியல் ஆதாயத்திற்கும், எதிர்ப்பார்ப்பிற்காகவும் அவர் இதனை செய்யவில்லை. என்னுடன் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18பேரும் அப்படிப்பட்டவர்கள் தான் என்று தினகரன் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தினகரன், தன்னுடைய ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்களின் பெயர்களை கூற ஆரம்பித்தார். தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்ளிட்டோரின் பெயரை கூறிய அவர் அதன்பின் மற்றவர்களின் பெயர்கள் நினைவுக்கு வராமல் சில நொடி தடுமாறினார்.
அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தங்களின் பெயர்களை கூற, தடுமாற்றத்துடன் அவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறி முடித்தார். ஒரு வருடமாக பதவி, பணம், புகழ் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்வா? சாவா? என பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்த தங்களின் பெயர் கூட தினகரனுக்கு தெரியாமல் போனதை எண்ணி சிலர் ஒரு நிமிடம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.