For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வெற்றிவேல் வழக்கு- செப். 11ல் விசாரணை
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றி வேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்குப் போட்டுள்ளது.
வரும் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ பொதுக்குழுவுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி கூட்டவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் வெற்றிவேல் கூறியுள்ளார்.
வெற்றி வேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் மனு இந்த வழக்கு வரும் திங்கட்கிழமையன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்
Comments
English summary
TTV Dinakaran group has filed a PIL petition against ADMK general body meeting which has been convened in Chennai.
Story first published: Friday, September 8, 2017, 19:10 [IST]