திகாருக்கு போயும் அடங்காத அடிப்பொடிகள்... தினகரன் பாகுபலியாம்!
டிடிவி தினகரனை பாகுபலியாக சித்தரித்து சமுக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை: பாகுபலி படம் வந்தாலும் வந்தது... யார் பாகுபலி என்பதில் பிரபாஸ் உடன் போட்டி போடுகின்றனர் அரசியல்வாதிகள்.
திகார் சிறையில் உள்ள டிடிவி தினகரனை அமரேந்திர பாகுபலியாக சித்தரித்து அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி மக்களை சித்திரவதை செய்து வருகின்றனர்.
பாகுபலி படம் நாடுமுழுவதும் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. பிரபாஸ் அனுஷ்கா நடித்துள்ள இந்த படத்தை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. பாகுபலியில் நீங்கள் யார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு ஆருட போட்டி கூட நடத்தப்படுகிறது.
திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் தன்னுடைய கதாபாத்திரம் அமரேந்திர பாகுபலி என்று கூறி பதிவிட்டுள்ளார்.
விடுவார்களா தினகரன் ஆதரவாளர்கள்.. இதைப் பார்த்து டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பாகுபலி உருவத்துடன் டிடிவி தினகரனின் முகத்தை ஒட்டி போட்டோஷாப் செய்து அதை சமூக வலைத்தளங்களில் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அரசியலில்தான் தினகரன், திவாகரன் அவரது வாரிசு இடையே போட்டி நீடிக்கிறது. இப்போது பாகுபலி படத்தை வைத்தும் பலத்த போட்டி நிலவுகிறது.
காலக் கொடுமைடா!