ஆளுநரை நாளை மறுநாள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்கிறார் தினகரன்!
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்கிறார் தினகரன்.
தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் இந்த கடிதம் மீது இதுவரை ஆளுநர் எதுவும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாகவும் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
ஆனால் இதை தினகரன் அணி திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நாளை சந்திக்க உள்ளார்.
இச்சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தக் கூடும் என தெரிகிறது.