For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான்.. அமைச்சர் தங்கமணி நக்கல்!

தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என அமைச்சர் தங்கமணி நக்கலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நாமக்கல்: தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என அமைச்சர் தங்கமணி நக்கலடித்துள்ளார்.

இரட்டை இலைச்சின்னத்தையும் கட்சியையும் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு வழங்கியுள்ளது. இதனால் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் குதூகலத்தில் உள்ளனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுகிறது என்றும் இதற்கு பாஜக தான் காரணம் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணைய தீர்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்தார்.

சின்னத்தை மீட்பேன்

சின்னத்தை மீட்பேன்

மேலும் ஆர்கே நகர் தொகுயில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார். மேலும் தினகரன் இரட்டை இலைச்சின்னத்தையும் மீட்பேன் என்றும் தினகரன் சூளுரை எடுத்துள்ளார்.

பகல் கனவு பலிக்காது

பகல் கனவு பலிக்காது

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது எனஅமைச்சர் தங்கமணி கூறினார்.

விரக்தியின் விளிம்பில் உள்ளார்

விரக்தியின் விளிம்பில் உள்ளார்

மேலும் தினகரன் இப்படி கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என்றும் அவர் கூறினார். இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்றும் தங்கமணி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஆர்கே நகர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Thangamani said that Dinakaran's dream of restoring the twin leaf would not help. He also said Dinakaran is on the brink of frustration because he does not get a double leaf symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X