திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே கூறியுள்ளார்- தினகரன்
திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே என்னிடம் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே தன்னிடம் கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தினகரனுக்கு போட்டியாக அம்மா அணி என்ற கட்சியை திவாகரன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தினகரன் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின்பேரில் திவாகரன் இவ்வாறு செய்கிறார்.
கட்சித் தொடங்கியதற்கும் அந்த தூண்டுதலே காரணம். திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என்று சசிகலாவே கூறியுள்ளார். எனவே அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தினகரன் கூறியுள்ளார்.
தன் கண் எதிரில் வளர்ந்த பிள்ளை இப்படி அரசியல், எம்எல்ஏ என பெரியாளாக இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தினகரன் வளர்ச்சி குறித்து திவாகரன் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு தனித்தனி கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.