சசிகலாவை பற்றி திவாகரன் எப்படி பேசினார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.. தினகரன் 'திடுக்'
திவாகரனை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தினகரன்.
Recommended Video
கும்பகோணம்: சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி ஆவர்த்தனம், சசிகலா புறக்கணிப்பு என பல குற்றச்சாட்டுகளை திவாகரன், அவரது மகன் ஜெயானந்த் முன்வைக்கின்றனர்.
ஆனால் தினகரன் தரப்பு இதை மறுத்து வருகிறது. திவாகரனுக்கு பதிலளிக்கும் வகையில் சுவாமிமலையில் தினகரன் கூறியதாவது:
திவாகரனுக்கு சசிகலா மீதுதான் கோபம். அந்த கோபத்தை என் மீது வெளிப்படுத்துக்கிறார் திவாகரன். குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மதிக்கலாம்.
அதற்காக அவர்களுக்கு கட்டுப்பாட்டு நடக்க முடியாது. குடும்பமும் அரசியலும் வேறானவை. இதே திவாகரன் சசிகலாவை எப்படிப் பேசினனர் என்பது எனக்கு தெரியும்.
அமமுகவை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் திவாகரன். அது நடக்காது. இதுவரை சொந்த சகோதரி சசிகலாவை சிறையில் போய் பார்க்காதவர்தான் இந்த திவாகரன்.
இவ்வாறு தினகரன் கூறினார்.