நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்க முடியுமாம்!
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க உத்தரவை நிறுத்த வைக்க முடியுமாம்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்திருப்பதால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது என்கிறார் தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கே. சுப்பிரமணியன்.
இது தொடர்பாக சன் நியூஸ் சேனலுக்கு கே. சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்திருக்கிறார். இந்த தீர்ப்பை முன்வைத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
உச்சநீதிமன்றத்தின் கோடைகால பெஞ்ச் இப்போதும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நீதிபதி சுந்தரின் தீர்ப்பை முன்வைத்து தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்க கோர முடியும்.
அப்படி கோரினால் நிச்சயம் சபாநாயகரின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு நிச்சயம் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு கே. சுப்பிரமணியன் கூறினார்.