இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்!
Recommended Video
நத்தம்: நம்ம வாஜ்பாய் தற்போது அறிவித்திருக்கும் பட்ஜெட் அருமையானது என திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேசிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டியுள்ளார்.
ஜெயலலிதா இருந்த வரை எந்த அமைச்சரின் குரலும் கேட்காத நிலையில் அவர் மறைந்த பிறகு எங்கும் அவர்களது குரல்தான் ஒலிக்கிறது என்ற நிலை வந்துள்ளது.
சரி எதையாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால், அதுவும் இல்லை. தற்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பொதுக் கூட்டம் என்ற பெயரில் உளறி கொட்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
நல்ல திட்டங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மத்தியில் ஆளும் பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேர்தலை குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், நடுத்தரவாசிகளை கவர்ந்திழுக்கும் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளனர்.
மக்களுக்கு
இந்த நிலையில் நத்தத்தில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் தற்போது இலவசங்கள் என்ற பெயரில் வழங்கும் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
3 தவணைகள்
வாஜ்பாய் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார். மிகவும் அருமையான பட்ஜெட். நமது முதல்வர் கூட அதை பாராட்டியிருந்தார். 5 ஏக்கர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
பென்ஷன்
அதுமட்டுமா, 60 வயதுக்கு பிறகும் ரூ. 3000 பென்ஷன் திட்டத்தையும் அறிவித்துள்ளனர். இதெல்லாம் சாதாரண விஷயமா என கேள்வி எழுப்பினார். இது போல் ஏற்கெனவே எம்பி தம்பிதுரை டெல்லியில் பிரதமர் நரசிம்மராவுடன் பேசிக் கொண்டிருப்பதாக பகீர் அளித்த நிலையில் தற்போது புதுகுண்டை திண்டுக்கல் சீனிவாசன் வீசியுள்ளார்.