இந்த தினேஷும் மனிதன் தானா.. இவர் மனதுக்குள் இப்படியும் ஒரு வக்கிரமா?
உடன்பிறந்த தங்கையும் அவரது கணவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை தினேஷ்குமார் வைத்திருந்துள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video
ராமநாதபுரம்: உடன்பிறந்த தங்கையும் அவரது கணவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை தினேஷ்குமார் வைத்திருந்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கணினி பொறியாளராக உள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் உறவுக்கார பெண்ணின் செல்போனில் டிராக்வியூ ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.
பின்னர் அந்த போனை தனது போனுடன் இணைத்துள்ளார். இதன் மூலமாக அந்த பெண் தனது கணவருடன் பேசும் அந்தரங்க விஷயங்களையும் தனது கணவருக்கு அனுப்பும் அந்தரங்க வீடியோக்களையும் திருடியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியபோது அவர் சிக்கினார். போலீஸார் அவரிடம் இருந்து கைப்பற்றிய லேப்டாப்புகளை ஆய்வு செய்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் நடத்திய அந்தரங்க உரையாடல்களும் இருந்தன.
இவை அனைத்தும் தனது உறவுக்கார பெண்களிடம் இருந்து திருடியது. மேலும் தனது சொந்த தங்கை என்றும் பாராமல் அவரும் அவரது கணவரும் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. இதை கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.