For Daily Alerts
Just In
தேவ்யானி விவகாரம்: சென்னையிலும் அமெரிக்காவுக்கான எதிரான போராட்டம்! தேசிய கொடி எரிப்பு!!
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனைவரையும் வெளியேற்றக் கோரி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன்பாக இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ,இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அமெரிக்க நாட்டின் கொடியும் தேசியக் எரிக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
இதேபோல் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினரும் தடுத்து நிறுத்து கைது செய்யப்பட்டனர்.
Comments
English summary
Protests broke out in Chennai on Saturday against the arrest and subsequent ill-treatment of Indian diplomat Devyani Khobragade in New York.
Story first published: Saturday, December 21, 2013, 16:59 [IST]