For Daily Alerts
Just In
ஐபிஎல் போராட்ட வழக்கில் கைதான இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஐபிஎல் போராட்ட வழக்கில் கைதான இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை : சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குநர் கெளதமனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியதாக இயக்குநர் கவுதமன் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவுதமன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கவுதமன் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Comments
English summary
Director Gowthaman Bail plea dismissed. Earlier Director Gowthaman Were arrested by Chennai police for attacking police on IPL Protest.
Story first published: Friday, June 29, 2018, 11:18 [IST]