For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் சிறப்பு மனுநீதி நாள் கூட்டம்.. ஏராளமான மாற்று திறனாளிகள் ஆட்சியரிடம் நேரில் மனு
பல்வேறு உதவிகள் கேட்டு மாற்று திறனாளிகள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி: பல்வேறு உதவிகள் கேட்டு ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் பதில் அளித்தனர்,
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டர்,
தங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, மானிய கடனுதவி, வேலைவாய்ப்பு, உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
மேலும் சிலர் வாய்மொழியாகவே தங்கள் குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். கோரிக்கைகள் மீதான மனுக்களை பரிசீலனை செய்வதாக ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
Comments
English summary
Physically challenged people petition to the thoothukudi collector today.
Story first published: Wednesday, June 27, 2018, 14:40 [IST]