For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை | திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்- வீடியோ

    சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்தது.

    1991-96-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    Disproportionate Assets: Chennai HC convicts EX Minister Satyamoorthy for 5 years

    இதில் அவரது மனைவி சந்திராவுக்கும் தொடர்பிருப்பதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி விடுவிக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கீழ் நீதிமன்றம் விடுவித்த நிலையில் உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Disproportionate Assets: Chennai HC convicts Ex Minister Satyamoorthy for 5 years and 2 years for his wife.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X