For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியை மாங்கு மாங்கென்று பிரேமலதா புகழ என்ன காரணம் தெரியுமா.. பலே ஐடியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Premalatha Vijayakanth: பிரச்சாரத்தில் அதிமுகவை பிரேமலதா புகழ என்ன காரணம் தெரியுமா?- வீடியோ

    சென்னை: ஐஸ் வைக்கிறது என்றால் என்ன என்று இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம் போல. மக்களிடம் கடுமையான அதிருப்திகளை அதிமுக அரசு சம்பாதித்து வைத்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பிரேமலதா விஜயகாந்த் போகும் இடமெல்லாம் அதிமுக ஆட்சியை வாய் வலிக்க வலிக்க புகழ்ந்து பேசி வருகிறார்.

    பிரேமலதாவின் இந்த திடீர் புகழாரத்திற்கு சூப்பரான ஒரு பின்னணி உள்ளது என்கிறார்கள். அதாவது சட்டசபை இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் பிரேமலதா இவ்வாறு பேசுவதாக சொல்கிறார்கள்.

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கனகராஜ் அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் அந்தத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    என்னண்ணே.. இப்படிக் கூச்சப்பட்டா எப்படி.. பேசிப் பழகத் தயங்கும் பொன்முடி மகன்!என்னண்ணே.. இப்படிக் கூச்சப்பட்டா எப்படி.. பேசிப் பழகத் தயங்கும் பொன்முடி மகன்!

    குறி வைத்து பேச்சு

    குறி வைத்து பேச்சு

    இந்நிலையில் அந்த தொகுதியை எப்படியாவது கேட்டு வாங்கி அங்கு போட்டியிட விரும்புகிறது தேமுதிக. ஏற்கனவே கடந்த 2011-2016 காலகட்டத்தில் சூலுர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேமுதிகவை சேர்ந்த பனப்பட்டி தினகரன்.

    வாய்ப்பிழந்த தேமுதிக

    வாய்ப்பிழந்த தேமுதிக

    கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதால் சூலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது தேமுதிக. இதனிடையே சூலூர் தொகுதியில் தேமுதிக போட்டியிட விரும்புவதன் பின்னணி குறித்து நாம் விசாரித்ததில், சூலூர் தொகுதியில் தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்த பனப்பட்டி தினகரனுக்கு கட்சியை தாண்டி ஏரியாவில் நல்ல செல்வாக்கு உள்ளதாம்.

    தனிப்பட்ட செல்வாக்கு

    தனிப்பட்ட செல்வாக்கு

    கடந்தமுறை மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்டே கணிசமான வாக்குகளை அவர் பெற்றாராம். இதனால் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால் எளிதாக கரையேறி விடலாம் என நினைக்கிறாராம் "அண்ணியார்". இதற்காகத் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு படி மேலாகவே அதிமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம்.

    கிடைக்குமா சீட்

    கிடைக்குமா சீட்

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட தொகுதிகளுடன் சூலுருக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு களமிறங்க தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன் ஆயத்தமாக உள்ளாராம். ஆனால் பாமக, பாஜக என யாருக்குமே இடைத் தேர்தலில் வாய்ப்பளிக்காத அதிமுக, தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு தருமா என்ற கேள்வியும் எழுகிறது.

    English summary
    DMDK may seek Sulur AC from ADMK in the By election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X