For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்டு, சண்டை... கோயம்பேட்டில் பொங்கல் வைத்து விழா கொண்டாடிய தேமுதிக

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று ஆடல், பாடல்கள், சண்டைக் காட்சிகளுடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த விழாவில் பெரும் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

DMDK celebrates Pongal in its HQ

தேமுதிக சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் அவரது குழுவினருடைய இசை நிகழ்ச்சி, சினிமா சண்டை பயிற்சியாளர் புஷ்பராஜ் குழுவினரின் சண்டை காட்சிகளும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கழக கலை இலக்கிய அணியினரின் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இ

நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிரேமலதா விஜயகாந்த் கழக மகளிர் அணியினருடன் பொங்கல் வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலைய செயலாளர்.ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் பி. முருகேசன், ஆர். உமாநாத், என். ஜாகீர் உசேன், கழக இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

English summary
DMDK celebrated Pongal festival in its HQ in Chennai as Vijayakanth and Premalatha led the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X