உணவு, உடை, இடம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... கேப்டன் புத்தாண்டு வாழ்த்து!
தமிழக மக்களுக்கு உணவு, உடை, இடம் மூன்றும் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் உறுதியாக கிடைக்கவேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்பாபு என திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்து டுவீட் போட்டுள்ளனர். ரஜினி, கமலுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த் இது குறித்து ஏதாவது கருத்து சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை மட்டும் தெரிவித்துவிட்டு சைலன்டாக இருக்கிறார் கேப்டன்.
தேமுதிக சார்பில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் "தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ucrWjwQuAw
— Vijayakant (@iVijayakant) December 31, 2017