ஜெயேந்திரர் உடலுக்கு விஜயகாந்த் மனைவியுடன் நேரில் அஞ்சலி!
மறைந்த ஜெயேந்திரர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: மறைந்த ஜெயேந்திரர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏராளமான பக்தர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று ஜெயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயேந்திரரின் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார். இதனிடையே ஜெயேந்திரர் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜெயேந்திர சரஸ்வதியின் உடல் நாளை காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பின்னர் 1994ம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக ஜெயேந்திர சுவாமிகள் பொறுப்பேற்றார்.
இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்ந்தார். அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண சமரச முயற்சியிலும் ஜெயேந்திரர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.