For Daily Alerts
Just In
"தலைவர்" பிறந்த நாள்.. 10 ஆடுகளை வெட்டி கறி சமைத்து விருந்து போட்ட தேமுதிகவினர்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி 10 ஆடுகள் பலியிடப்பட்டு கறிவிருந்து அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கன்னியம்மன் கோவிலில் நேற்று காலை கட்சி நிர்வாகிகள் கூடினர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்துப் படைத்தனர். அடுத்ததாக கோவில் வளாகத்திலேயே 10 ஆடுகள் வெட்டப்பட்டன.
செங்கல்பட்டு எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்டு கறியுடன் கட்சித் தொண்டர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது திரண்ட கிராம மக்களுக்கும் கறி விருந்து தரப்பட்டதாம்.
Comments
English summary
Kanchipuram DMDK volunteers gave NV party for Vijayakanth’s birthday for the villagers.
Story first published: Monday, September 15, 2014, 13:26 [IST]