For Daily Alerts
Just In
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ
சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி தொடர்பான வழக்கில் ஒருவழியாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்தக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
Comments
English summary
DMK has announced all party meeting on 17th of May to discuss next step on Cauvery issue.