ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்.. முதல்வர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
பசுமை வழிசாலை குறித்து ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
Recommended Video
சென்னை: பசுமை வழிசாலை குறித்து ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி போராட்டம் போல் சேலம் போராட்டமும் ஆகிவிடக் கூடாது என ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கருத்து கேட்க வேண்டும்
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
தூத்துக்குடி போல்
8 வழிச்சாலை திட்டத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. தூத்துக்குடி போல் போராடும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என பேசினேன்.
நீக்கக்கூடாது
எனது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்க கூடாது என்று கூறினேன்.
திமுக வெளிநடப்பு
சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வரின் உரையை புறக்கணித்தது திமுக வெளிநடப்புசெய்துள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.