Tamilnadu Flash News: சிறையில் ஆபத்து- நிர்மலாதேவி பீதி, எச்.ராஜாவுக்கு தமிழிசை, பாரதிராஜா கண்டனம்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது உள்ளிட்ட ஆளுநரின் அத்துமீறல்களைக் கண்டித்து சென்னையில் இன்று திமுகவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகையிட செல்ல முயன்ற போது திமுகவினரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னை கொட்டிவாக்கத்தில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வட மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டைல்ஸ் ஒட்டும் பணிக்காக வந்த இடத்தில் இக்கொலையை செய்துள்ளார் இந்த இளைஞர். அவரது கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது உட்பட தமிழகத்தின் அனைத்து அரசியல், க்ரைம் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பான ப்ளாஷ் செய்திகளின் அப்டேட்டைத் தொடர்ந்து இப்பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.