எழுந்து வா தலைவா என தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்
எழுந்து வா தலைவா என தொண்டர்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷமிட்டனர்.
Recommended Video
சென்னை: எழுந்து வா தலைவா என தொண்டர்கள் பெருக்குடன் கோஷமிட்டு வருகின்றனர்.
கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் சென்றனர். பின்னர் முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
#DMK cadres reaction after the recent health bulletin over @kalaignar89’s health. pic.twitter.com/iv0WAOFFrc
— Pramod Madhav (@madhavpramod1) August 6, 2018
இதனால் தொண்டர்கள் கலக்கம் அடைந்து மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் எழுந்து வா தலைவா என்று உணர்ச்சி பெருக்குடன் கோஷமிட்டு வருகின்றனர்.