கேரள முதல்வராகப் பதவியேற்கும் பினராயி விஜயனுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: கேரள முதல்வராகப் பொறுப்பேற்கும் பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 தொகுதிகளில் வென்றது.
இந்நிலையில் அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினரான பினராயி விஜயன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இடதுசாரி முன்னணியின் சட்டசபைக் குழு தலைவராக பிரனாயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கேரளாவின் புதிய முதல்வராக வரும் மே 25-ந்தேதி அவர் பதவியேற்கிறார்.
இதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி, பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘'உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.