நக்கீரன் கோபாலை மருத்துவமனையில் சந்தித்த மு.க.ஸ்டாலின்
நக்கீரன் கோபாலை சந்திக்க திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார்.
Recommended Video
சென்னை: நக்கீரன் கோபாலை சந்திக்க திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் கோபாலை, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து அங்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக தலைவர்களும் உடன் வந்தனர். அங்கு நக்கீரன் கோபாலை சிறிது நேரம் சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.