திமுக தலைவரானதும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை!
Recommended Video
சென்னை: பெரியார் நினைவிடத்திலும், மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் இன்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்பிறகு, மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது விஜயமாக அண்ணா சமாதிக்கு ஸ்டாலின் சென்றார்.
அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மலர் வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அவர். திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரைமுருகனும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்பிறகு, வேப்பேரியில் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.