ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்பதா? மத்திய அரசுக்கு ஈரோடு திமுக மாநாடு கண்டனம்
பெரியார் சிலை சேதத்துக்கு அதிமுக அரசே பொறுப்பு என்று திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு: பெரியார் சிலை சேதத்த்துக்கு அதிமுக அரசே பொறுப்பு என்று திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று நிறைவடையவுள்ள விழாவில் திமுகவினர் சில முக்கிய தீர்மானங்களையும் கண்டனங்களையும் நிறைவேற்றினர்.
அதில் மதவெறியை தூண்டும் சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. பெரியார் சிலை சேதத்துக்கு அதிமுக அரசு பொறுப்பு ஆகும். லோக்பாலை அமைக்காமல் இழுத்தடிக்கும் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் எனும் மத்திய அரசுக்கு கண்டனம். மாநில சுயாட்சியை வலியுறுத்தி திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உரிமைகளை பறிப்பதை வேதனை, கொந்தளிப்புடன் கண்டிக்கிறது இந்த மாநாடு. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜிஎஸ்டியில் திருத்தங்களை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழக நதிகள் இணைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நள்ளிரவில் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது.