விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளராக மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு வாய்ப்பு?
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி மரணமடைந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் அக்டோபர் 21-ல் வாக்குப் பதிவு நடைபெறும். அக்டோபர் 24-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் திமுகவும் அதிமுகவும் மோதுகின்றன. இரு கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் இருவரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளனர். இவர்களில் புகழேந்திக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்றும் அவர் வெற்றி பெறுவது எளிதானதாகவும் இருக்கும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்
திமுகவினரைப் பொறுத்தவரையில், அதிமுக போட்டியிடுவதால் பாமக களத்துக்கு வராது; அப்படி வந்தாலும் சமாளித்துவிடுவோம். அதனால் எளிதாக எங்களால் வெல்ல முடியும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.