உதிரும் நிா்வாகிகள்... மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க ஏற்பாடு
சென்னை: கழக நிா்வாகிகள் அ.தி.மு.க. பக்கம் ஈா்க்கப்படுவதையடுத்து மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது தி.மு.க
அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டம் வரும் 25.5.2015 திங்கட்கிழமை காலை 10மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக்கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்செந்தூா் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார் கருப்பசாமி பாண்டியனும் அ.தி.மு.க. வுக்கு அணி தாவப் போவதாக செய்திகள் வெளியானதையடுத்து தி.மு.க. மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்னகு தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் மாவட்ட அளவில் தி.மு.க. வின் நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தொிகிறது.