வரும் 24 ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாவதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், புதிதாதகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
கூட்டத்தில், நடைபெற்ற தமிழகத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் அன்பழகன்.