புதுவை தேர்தல்: 4 பேர் கொண்ட திமுக தொகுதி பங்கீடு குழு அமைப்பு
சென்னை: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவிருக்கின்ற புதுச்சேரி மாநில சட்டப்பேரவைப் பொது தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிட பின்வருவோரைக் கொண்ட குழு ஒன்று தலைமைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் இடம்பெறுவோர் வருமாறு:
1. ஆர்.வி.ஜானகிராமன் ( உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
2.ஏ.எம்.எச்.நாஜீம் (புதுச்சேரி - காரைக்கால் மாநில அமைப்பாளர்)
3.எஸ்.பி.சிவக்குமார் (புதுச்சேர் வடக்கு மாவட்ட அமைப்பாளர்)
4.ஆர்.சிவா (புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர்)
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் தேர்தல் அறிக்கை:
திமுக தேர்தல் அறிக்கையில் சில சில திருத்தங்களை செய்துள்ளதாகவும், வரும் 7 ஆம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.