கருணாநிதி, வாஜ்பாய் மறைவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்
Recommended Video
சென்னை: திமுக பொதுக்குழுவில், மறைந்த கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூடியதும் முதலில் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தி 2 நிமிடம் நிர்வாகிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும் ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக முன்னோடிகள் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை டிஎஸ்கே இளங்கோவன் வாசித்தார்.
இதன்பிறகு, கருணாநிதி உடல் நலம் பாதிப்பு மற்றும் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள் 248 பேர் உயிர் துறந்ததாகவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு பலி, கேரளாவில் வெள்ளத்தால் பலியானோருக்கு பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தை பொன்.முத்துராமலிங்கம் முன்மொழிந்தார்.
உயிரிழந்த திமுக தொண்டர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவது என திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
13 முன்னோடிகளுக்கு அஞ்சலி:
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி உள்பட திமுகவின் முக்கிய முன்னோடிகள் 13 பேருக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.