அதிமுக தொடர்ந்து முன்னிலை... சோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு சில தொண்டர்கள் சோகமயத்துடன் காட்சியளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருந்தாலும் சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் பெரும்பாலான திமுக தொண்டர்கள் உற்சாகத்துடனே காணப்படுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமையன்று காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பிருந்தே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.
காலை 8.30 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியபோது திமுக முன்னணி பெற்ற தொகுதிகள் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது கூடியிருந்த திமுக தொண்டர்கள் சந்தோஷ மனநிலையில் "கலைஞர் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவரம் அறிவிக்கப்பட்டபோது,அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் மாறிப் போனது. அண்ணா அறிவாலயமே சோகமயமாக காணப்பட்டது.
மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திமுக வெற்றிபெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்ததும் தொண்டர்கள் ஒவ்வொருவராகக் கலையத்தொடங்கினர்.
தமிழகத்தில் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. திமுக 93 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. சென்னையில் 12 தொகுதிகளில் திமுக முன்னணியில் இருந்தது. இது திமுகவினரை உற்சாகப்படுத்தியது. பல தொண்டர்கள் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் "இப்படி ஆயிடுச்சே. இப்படி ஆயிடுச்சே' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் அவர்களில் ஒரு சிலர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.