பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்பு கொடி... செயற்குழுவில் ஐடியா கொடுத்த கனிமொழி
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தலாம் என ஐடியா கொடுத்தது கனிமொழி எம்.பியாம்,.
Recommended Video
சென்னை: காவிரி பிரச்சனையில் துரோகம் செய்த பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த போராட்ட ஐடியாவை கொடுத்ததே ராஜ்யசபா எம்பி கனிமொழிதானாம்.
காவிரி பிரச்சனையை முன்வைத்து திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஏப்ரல் 15-ந் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அன்று பிரதமர் மோடிக்கு கருப்பு காட்டுவோம் என அறிவித்தார்.
திமுகவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக செயற்குழுவில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்து கனிமொழிதான் குறிப்பிட்டு பேசினாராம். அப்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டலாம் என்கிற யோசனையையும் கனிமொழி முன்வைத்தாராம்.
இதை ஏற்று அதிரடி போராட்டத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின் என்கின்றன திமுக வட்டாரங்கள்.