மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி!
பல் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற கருணாநிதி வீடு திரும்பினார்.
சென்னை: பல் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் பல முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இதனால் கடந்த ஓராண்டாக முன்பைப்போல் அரசியல் நிகழ்ச்சிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. சமீபத்தில் முரசொலி பவள விழாவின் புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி.
கண்ணீர்விட்ட கருணாநிதி
அதைத்தொடர்ந்து அறிவாலயத்துக்கும் சென்றார். அங்கிருந்து புறப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதார் கருணாநிதி.
தொண்டர்களையும் சந்திக்கிறார்
தனது வீட்டிற்கு வந்த பிரதமர் மோடியையும் கருணாநிதி சந்தித்தார். இந்த சம்பவங்களின் போதுதெல்லாம் அவர் தொண்டர்களையும் சந்தித்தார்.
நீதி வெல்லும் அநீதி வீழும்
அண்மையில் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போது கூட கருணாநிதி நீதி வெல்லும் அநீதி வீழும் என எழுதினார்.
அவரது எழுதிய இந்த வாசகம் சமூக வலைதளங்களில் ரைவலானது.
கையசைத்த கருணாநிதி
இதைத்தொடர்ந்து அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வரும் கருணாநிதி அவர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தி வருகின்றார்.
பல் கிளினீங் செய்ய
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார். பல்வலி காரணமாக பல் கிளினீங் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பேச்சுப் பயிற்சி
இந்நிலையில் பல் சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளக்கப்பட உள்ளதால் அவருக்கு பல் கிளினீங்சி கிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.