For Daily Alerts
Just In
மதுரை: பணப்பட்டுவாடா தகராறு… திமுக உட்கட்சி மோதலில் நிர்வாகி மரணம்
மதுரை: மதுரை திருநகர் அருகே தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உட்கட்சி தகராறில் திமுக நிர்வாகி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தி.மு.க.,ஒன்றிய இலக்கிய செயலாளர் நிலையூர் பாண்டி(52) இவருக்கும் செல்வம் பி.எஸ்.என்.எல் மாநில தொழில் தலைவருக்கும் வியாழக்கிழமையன்று நிலையூர் மந்தையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் சமரசம் ஏற்பட்டு செல்வத்தை காரில் அனுப்பி விட்டனர். பின்னர் நிலையூர் பாண்டி, வேலு , சுப்பிரமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு பாண்டியை தள்ளி விட்டதில் அவர் மரணமடைந்தார்.
நிலையூர் பாண்டிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Comments
English summary
The 16th Lok sabha elections passed off peacefully in the southern districts in Thursday but for two incidents of violence, one of which lead to the death of a DMK men in an intra-party clash at Madurai.
Story first published: Friday, April 25, 2014, 9:07 [IST]