பணப்புகாரில் அதிமுகக்காரர் வீடு முற்றுகை.. 'சவுண்ட் விட்ட' பெண்மணி.. தெறித்து ஓடிய திமுகவினர்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் ஒரு வீட்டுக்குள் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி திமுகவினர் முற்றுகையிட்ட நிலையில் அந்த வீட்டுக்கார பெண்மணி வந்து 'சவுண்ட்' விட்டதும் எல்லோரும் தெறித்து ஓடிய சம்பவம், அரங்கேறியது.
காவல்துறையினரையும் அழைத்துக்கொண்டு திமுகவினர் இன்று கொருக்குப்பேட்டையிலுள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். அந்த வீட்டுக்குள் அதிமுகவினர் சார்பாக பணம் பட்டுவாடா செய்ய மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர் திமுகவினர்.
அந்த வீட்டை சேர்ந்த நபர் ஒருவர், அப்படி எதுவும் இங்கு இல்லை என கூறி வாக்குவாதம் செய்து பார்த்தார். ஆனால் திமுகவினர் ஏற்கவில்லை. சிலர் வீட்டு கதவை உடைக்கவும் முற்பட்டனர்.
அப்போதுதான் வீட்டுக்கார பெண்மணி வெளியே இருந்து வீட்டுக்கு வந்தார். "இங்க எதுக்கு கூட்டம் போடுறீங்க. என் வீட்டில் உங்களுக்கு என்ன வேலை" என வீட்டு கதவு முன்னால் நின்று கொண்டு அந்த பெண்மணி 'சவுண்ட்' கொடுக்க திமுகவினர் நைசாக ஜகா வாங்கி இடத்தை காலி செய்தனர்.
இதையடுத்து அங்கு போலீசார் வந்து நின்று, வீட்டுக்குள் யாரும் போக கூடாது என கூறி வீட்டை வெளியே இருந்து பூட்டு போட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.