குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.. தமிழிசை, எச் ராஜாவுக்கு ஜெ.அன்பழகன் பதிலடி!
மெர்சல் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: மெர்சல் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சனம் செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரின் எதிர்ப்பால் மெர்சல் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைவிட அதிக வசூலைக் கொடுத்துள்ளது.
அரசுக்கு எதிரான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க பாஜகவினர் கெடு விதித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ள நான்கு காட்சிகளை நீக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சலுக்கு பெருகும் ஆதரவு
படத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. படத்தின் காட்சிகளை நீக்கக்கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.
மெர்சலுக்கு திமுக ஆதரவு
இந்நிலையில் மெர்சல் பட விவகாரத்தில் ஆரம்பம் முதலே எதிரான விமர்சனங்களை வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
|
ஜெ.அன்பழகன் டிவிட்
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஜெ அன்பழகன். குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என கூறி அதில் தமிழிசை மற்றும் எச் ராஜா ஆகியோரின் டிவிட்டர் பக்கங்களையும் இணைத்துள்ளார்.
பாஜகவுக்கு நன்றி சொல்லனும்
மேலும் மெர்சலை நாடு முழுவதும் ட்ரென்ட் செய்த பாஜகவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்ப்பால் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது இன்று பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.