மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விவகாரம்: பாஜகவுக்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் வார்னிங்
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் முறைகேடு விவகாரம் தொடர்பாக தம்மை தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட தமிழக பாஜகவுக்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு பகுதியை கழிவறையாக மாற்றி வாடகைக்கு விட்டார் திமுக பிரமுகர் என ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதனை வைத்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தேன் எடுத்தவன் புறங்கையை ருசிப்பானாம்.
தேன் எடுத்தவன் புறங்கையை ருசிப்பானாம்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 21, 2020
இந்து விரோத கட்சிக்கு இந்து கோவில் இடங்களை அபகரிக்க இனிக்கிறதோ?
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் @ptrmadurai கீழ் நடந்த முறைகேட்டிற்கும் மன்னிப்பு கேட்பாரா @mkstalin
PKயார் வித்தை எல்லாம் @arivalayam த்திடம் பலிக்குமா என்ன? pic.twitter.com/jLIxwbMWnD
இந்து விரோத கட்சிக்கு இந்து கோவில் இடங்களை அபகரிக்க இனிக்கிறதோ? மதுரை மீனாட்சியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் @ptrmadurai கீழ் நடந்த முறைகேட்டிற்கும் மன்னிப்பு கேட்பாரா @mkstalin PKயார் வித்தை எல்லாம் @arivalayam த்திடம் பலிக்குமா என்ன? என அதில் பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.எல்.ஏ. தியாகராஜன், பொதுவாக இது போன்ற கேடுகெட்ட செயல்களின் மீது நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், @BJP4TamilNadu முன்வைக்கும் கேவலமான அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நான் தரம் தாழ்வதில்லை.
பொதுவாக இது போன்ற கேடுகெட்ட செயல்களின் மீது நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில், @BJP4TamilNadu முன்வைக்கும் கேவலமான அவதூறுகளுக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நான் தரம் தாழ்வதில்லை.
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) February 21, 2020
ஆனால், எதற்கும் எல்லை உண்டு. பதிவை நீக்கி மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/PFuKhs1Xoa
ஆனால், எதற்கும் எல்லை உண்டு. பதிவை நீக்கி மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.